காமெடி நடிகர் ரோபோ சங்கர்( 46 வயது ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். உடல்நிலை மோசமாகி ஐசியூவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரோபோ சங்கர் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் வெளியான பல்வேறு நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் தனது மிமிக்ரி மூலமாக மக்களை பெரிதும் கவர்ந்தார்.46 வயதான இவருக்கு அண்மையில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரோபோ சங்கர் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீர் சத்து குறைபாடு, ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை அவர் உடல் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சொல்லப்பட்ட நிலயில்சிகிச்சைபலனளிக்காமல்உயிரிழந்துள்ளார்.2007 ஆம் ஆண்டு ரவிமோகன் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் முலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார். பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்த ரோபோ சங்கர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்சிகளில் அறிமுகமானார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதில் புகழ் பெற்றார். குறிப்பாக விஜய் டிவியில் வெளியான பல்வேறு நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் மிமிக்ரி செய்து மக்களை அதிகம் கவர்ந்தார். அப்போது அவர் ரோபோ போல் நடனமாடியும் மக்கள் மனதில் இடம்பிடித்து இருந்தார். இதில் பிரபலம் அடைந்த ரோபோ சங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். ரவிமோகன் – பாவனா நடிப்பில் வெளியான தீபாவளி படத்தில் காமெடி நடிகராக ரோபோ சங்கர் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு பல படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தார். இவரது தனித்த நடிப்பினால் மக்கள் மனதை வென்றார். நடிகர் தனுஷ் நடித்த மாரி படத்தில் ரோபோ சங்கர் கேரக்டர் பேசப்பட்டது.இதேபோன்று விஷ்ணு விஷாலின்
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படத்தில், “அன்னைக்கு ராத்திரிபத்துமணிஇருக்கும்..கோழிகொக்கரக்கோ என கூவிச்சு” என்ற காமெடி பலரையும் ரசிக்கை வைத்தது. தொடர்ந்து விஜய்யின் புலி படத்திலும், அஜித்தின் விசுவாசம் படத்திலும் என பல முன்னணி நடிகர்களுடனும் ரோபோ சங்கர் நடித்து வந்தார்.இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் புதிய படப்பிடிப்பில் ரோபா சங்கர் நடித்து வந்தபோது திடீரென மயங்கி விழுந்ந்தார். இதையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.தொடர்ந்து நேற்று மாலையில் அவர் ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையிலேயே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் கூறியதாக தகவல் வெளியானது. கல்லீரல், சிறுநீரக குறைபாடு காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் தான் இரவு 8.30 மணியளவில்அவர்உயிரிழந்ததாகடாக்டர்கள்அறிவித்துள்ளனர்.ரோபோசங்கரின்மறைவுசெய்திஅறிந்துஅவரதுகுடும்பத்தினர்மற்றும்நடிகர்கள்,ரசிகர்கள்மத்தியில்அதிர்ச்சியையும்,சோகத்தையும்ஏற்படுத்திஉள்ளது.நடிகர்கள்,
ரசிகர்கள்அவரதுமறைவுக்குஇரங்கல்தெரிவித்து வருகிறார்கள்.ரோபோ சங்கர் மறைவுக்கு பலரும் இரங்கல்தெரிவித்துவருகிறார்கள்.தமிழகமுதல்வர் ஸ்டாலின்வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில்,அவரது குடும்பத்தினருக்குஎனதுஆழ்ந்தஇரங்கலைதெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன் ரோபா சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது என்றும், தமிழ் சினிமாவுக்கு பேரதிர்ச்சி என்றும் தெரிவித்தார். சென்னையில் நாளை காலை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. நாளை மாலை 3 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.