fbpx
Others

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து…

எதிர்க்கட்சித் தலைவர்: ராகுலுக்கு 8,250 சதுர அடி பங்களா, ரூ.3.3 லட்சம் சம்பளம்!

10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரசுக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.இதையடுத்து ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சி நியமித்தது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு20ஆண்டுகாலஅரசியல்வாழ்க்கையில்முதன்முறையாக ராகுலுக்கு அரசியல் சாசனப் பதவி கிடைத்துள்ளது.இதற்காக அவருக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க உள்ளன. எதிர்க்கட்சித் தலைவருக்கு டெல்லியில் டைப்-8 குடியிருப்பு கிடைக்கும்.இது 8,250 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.தனி வளாகத்தின் நடுவில் வெள்ளை மாளிகை போன்று அமைந்துள்ள இந்த பங்களாவில் வரவேற்பறை மற்றும் படுக்கையறைகள் என மொத்தம் 7 பெரிய அறைகள் உள்ளன.இங்கு பணிபுரியும் உதவியாளர்களுக்கு வளாகத்தில் 4 சிறிய குடியிருப்புகள் உள்ளன.இந்த பங்களாவில் சோபா, மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து தளபாடங்களும் அரசு செலவில் வழங்கப்படும்.டெல்லியில் இந்த அளவுள்ள பங்களா ஒன்றின் விலை சுமார் ரூ.100 கோடி.வாடகை பல லட்சம். ராகுலுக்கு இதுபோன்ற பங்களாவில் வசிப்பதுபுதிதல்ல. முன்னதாக, ராகுல் தனது குழந்தைப் பருவத்தை தனது பாட்டி இந்திரா காந்தியின் பிரதமர் இல்லத்தில் கழித்தார்.பின்னர், அவரது தந்தை ராஜீவ் காந்தி பிரதமரானபோது அதில் இருந்தார்.ராகுலின் தாயார் சோனியா காந்தி வசிக்கும் அரசு பங்களாவும் இதே வகையைச் சேர்ந்தது. 3 ரேபரேலி எம்.பி. ராகுல் வசிக்கும் துக்ளக் சாலை வீடும் அதே வகை-8 பங்களாவாகத் தெரிகிறது.ஆனால், மற்ற வசதிகள் இல்லாததால், அவர் இங்கு தொடர்வதா அல்லது புதிய இடத்திற்கு மாறுவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.ராகுலின் அரசியல் சாசனப் பதவி கேபினட் அமைச்சர் பதவிக்கு சமமானது.எம்.பி.யாக இருந்த ராகுல் மாதசம்பளம் ரூ..2 லட்சம், இப்போது ரூ.3.3 லட்சமாக இருக்கும்.

இது தவிர இந்தப் பதவிக்கு மாதாந்திரச் செலவுகள் உண்டு.எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு அரசில் இருந்து 14 உதவியாளர்கள் இருப்பார்கள். ஆனால், இதுவரை அவருக்கு கிடைத்து வந்த எம்.பி., சலுகைகள் கிடைக்காது.ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலிடம் எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் (ஆண்டுக்குரூ.5கோடி)உள்ளது.கடந்த10ஆண்டுகளாகமக்களவையில்பேசவாய்ப்பளிக்கப்படவில்லை என்று ராகுல் புகார் கூறி வந்தார்.ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அனைத்து விவகாரங்கள் மற்றும் மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசுவதற்கு அவருக்கு இப்போது முக்கிய இடம் வழங்கப்படும்.இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளின் குரலாக இருக்க வேண்டிய பொறுப்பு ராகுலுக்கு உள்ளது.மக்களவைக்கு 5-துமுறையாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுலுக்கு மிக இளம் வயதிலேயே எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது.லோக்பால் தலைவர், சிபிஐ இயக்குநர், தேர்தல் ஆணையர், மத்திய தகவல் ஆணையர், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான தேர்வுக் குழுவில் பிரதமருடன் ராகுலும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்.

Related Articles

Back to top button
Close
Close