ஈரோடு—தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம்,,,,

ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.நெரிசல் ஏற்படாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்க வேண்டும், போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும், மருத்துவ வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்லும் வழிகள், உரிய நேரத்திற்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 84 நிபந்தனைகளை இந்த கூட்டத்துக்குகாவல்துறைவிதித்தது.திட்டமிட்டபடிகாலை11மணிக்குகூட்டம்துவங்கிமதியம்12:45மணிக்குள்முடிவடைந்தது.விஜய்பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஓருவர் ஸ்பீக்கர்கள் வைக்கப்படிருந்த இரும்பு தூணின் மீது ஏறியிருந்தனர். அருகில் இருந்தவர்கள், நிர்வாகிகள், காவல் துறையினர் கூறியும் அவர்கள் இறங்க மறுத்துவிட்டனர்.அதைப் பார்த்த விஜய், ”தம்பி! உடனே கீழே இறங்குப்பா… நீ கீழே இறங்கு நான் முத்தம் கொடுக்கிறேன்!” என்று கூறியதும் அவர்கள் இருவரும் இறங்கிவிட்டனர். இதேபோன்று தடுப்பில் ஏறிக் குதித்த ஓர் இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டது”கோவை, திருப்பூர்,நீலகிரி,சேலம்உள்ளிட்டபல்வேறுமாவட்டங்களில் இருந்து 1800க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பெண்கள் பகுதிகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு கொடுப்பதற்காக 400 பெண் காவலர்களை நியமித்திருந்தோம். அதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது”என்றார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா. விஜய் கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…