அரசு பள்ளி–ஸ்லோ லேனர்ஸ் சர்ச்சை… வேண்டாம் ப்ளீஸ் !
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, பொதுத்தேர்விற்கு முன்பாக போதிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, வகுப்பு தேர்வுகள் மற்றும் பாடத்தை கவனித்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு மாணவரின் திறன்களையும் ஆராய வேண்டும்.யார் போதிய அளவு கற்கவில்லையோ, அவர்களை தனியாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களை ஸ்லோ லேனர்ஸ் என்று அடையாளப்படுத்துகின்றனர். இவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள், செயல்திட்டம் ஆகியவற்றை குறிப்பிட்ட பள்ளிகளை சேர்ந்த மூத்த ஆசிரியர்கள் தயார் செய்து வருகின்றனர். இவற்றை தேவைப்படும் பள்ளி மாணவர்களுக்கு பகிரவுள்ளனர்.இந்த செயல்திட்டத்தில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது வரவேற்கப்படும் விஷயம் என்று பார்த்தாலும், இந்த மாணவர்களை ஸ்லோ லேனர்ஸ்என்றுஅடையாளப்படுத்து
வது தான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பல பெற்றோர்களும், பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்தவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர். சில பெற்றோர்கள் கூறுகையில், எனது மகன் கற்றலில் சற்று பின் தங்கியிருக்கிறார். எனவே மாலை நேரத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கிபயிற்சிஅளிக்கவேண்டியதேவையுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாள் வீட்டிற்கு வரும் போது மிகவும் வருத்தத்துடன் காணப்படுவதாக குறிப்பிட்டனர்.