இராணிப்பேட்டை அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிவழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் (29.12.2022) நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் / நலத் திட்ட உதவிகளை நேரடியாக வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள். மாந்தாங்கல் சாலை. S.K.மஹாலில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 445 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27.17 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் 9 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.5 கோடி மதிப்பிலான பெருங்கடனுதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.J.L.ஈஸ்வரப்பன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபா சத்யன். இ.கா.ப.. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி.ஜெயந்தி திருமூர்த்தி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திரு.மு.நானிலதாசன். திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.ஜி.லோகநாயகி, மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளனர்.