Others
அரக்கோணம்–கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

இராணிப்பேட்டை மாவட்டம்,
அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1. மேத்யூ டேனியல் (வ/31) 2. முகேஷ் (எ) பப்புலு (வ/28) 3. விக்னேஷ் (எ) விக்கி (வ/26) 4. நாகராஜ் (வ/25) ஆகியோர்களை அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர்.தங்ககுருநாதன் அவர்கள் தலைமையில் குற்றவாளிகள் சைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும் இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . விவேகானந்த சுக்லா, அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில்குற்றவாளிகள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்