அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை….
போரின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி வைத்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இது தொடர்பாக தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை பதிவை போட்டுள்ளார்.அதில், ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏதேனும் கண்ணிவெடிகளை அமைத்திருந்தால், அவர்கள் அவ்வாறு செய்ததாக எங்களுக்கு எந்த அறிக்கையும் இல்லை, அப்படி இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம்! என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தகாரணத்திற்காகவும்கண்ணிவெடிகள் வைக்கப்பட்டு, அவை உடனடியாக அகற்றப்படாவிட்டால், ஈரானுக்கு ராணுவ விளைவுகள் இதற்கு முன் கண்டிராத அளவில் இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.மறுபுறம், அப்படி வைக்கப்பட்டிருந்து அவற்றை அவர்கள் அகற்றினால், அது அவர்களுக்க சரியான திசையில் ஒரு பெரிய படியாக இருக்கும்! என்றும், கூடுதலாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடியை நிறுவமுயற்சிக்கும்எந்தவொருபடகுஅல்லதுகப்பலையும்நிரந்தரமாகஅழிக்க,போதைப்பொருள்கடத்தல்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணை திறன்களை நாங்கள்பயன்படுத்துவோம்என்றும்கூறியுள்ளார்.மேலும்,அவர்கள்விரைவாகவும், வன்முறையாகவும் கையாளப்படுவார்கள். ஜாக்கிரதை! என்றும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.தங்களுக்கு எதிரான தாக்குதலால் ஹார்முஸ்ஜலசந்தியை ஈரான் முடக்கி வைத்துள்ளது. அந்த வழியாக செல்லும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு
நாடுகளின் எண்ணெய்கப்பல்கள்தாக்கப்படும்எனஎச்சரிக்கையும் விடுத்தது ஈரான்.இதைத் தொடர்ந்து, அரபு நாடுகளின் கப்பல்களும் அந்த வழியில் சிக்கியுள்ளன. இதோடு சேர்த்து, தனது அண்டை நாடுகளானஅரபுநாடுகள்மீதுஈரான்கடுமையானதாக்குதல்களை நடத்தி,அங்குள்ளஎண்ணெய்கிடங்குகளையும்சேதப்படுத்திவருகிறது. இதன்காரணமாக,ஆசியநாடுகளில்எண்ணெய்மற்றும்எரிபொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்டநாடுகளும்இந்தபாதிப்பைஎதிர்கொள்கின்றன. ஏற்கனவே பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும், தனியார் நிறுவனங்கள் தீங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தேபணியுரியஅனுமதிக்கவேண்டும்என்றும்அந்நாட்டுஅரசுஅறிவுறுத்தியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, சமையல் எரிவாயு தட்டுப்பாடால் ஏற்கனவே பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், நாடு முழுவதுமே ஹோட்டல்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமையை சமாளிக்க பல்வேறு உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. இதேபோல், இலங்கை உள்ளிட்ட இன்னும் பிற நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த பிரச்னை தீர ஒரே வழி, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது தான். அதனால் தான், ட்ரம்ப் இத்தகைய ஒரு மிரட்டலை விடுத்துள்ளார். எனினும், இதுவரை ட்ரம்ப்பின் எந்த அச்சுறுத்தலுக்கும் ஈரான் பயப்படவில்லை. இப்போது, இந்த விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்தே, பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்.