வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வழங்கப்பட்டது..
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வழங்கப்பட்டது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்வில் இயக்கத்தின் மிக உயரிய அங்கீகாரமான வெள்ளி யானை விருதினைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி.ஆளுநர்அவர்கள்வழங்கிக்கெளரவித்தார்.மிகஉயரியவெள்ளியானைவிருதினை பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி. ஆளுநர் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.மிக உயரிய வெள்ளி யானை விருதினை மாணவர்களின் நலன் காக்கும் நம் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு .க.ஸ்டாலின் அவர்களுக்கும்,எதிர்காலஇந்தியாவின்நம்பிக்கைத்தூண்களானஎன்அன்புமாணவச்செல்வங்கள்மற்றும்இளைஞர்களுக்கும்பணிவுடன்சமர்ப்பிக்கிறேன்.அன்பு, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய வலிமையான சமுதாயத்தைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். அன்பும் நன்றியும்! இவ்வாறுஅமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.