விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதியவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு…?

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் பாணாவரம் நெமிலி ரோடுமுத்துமாரியம்மன் கோயில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது இருப்பிடச் சான்று வேண்டி கடந்த 27.06.24 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன் இந்த மனுவை குறித்து தகவல் தெரிந்து கொள்வதற்காக 14. 10. 24 அன்று சுமார் 4:00 மணிக்கு பாணாவரம் விஏஓ அலுவலகத்திற்கு சென்றுமுரளிமனோகரிடம்விசாரித்தேன் அதற்கு அவர் என்னுடைய சாதி பெயரை சொல்லி திட்டினார் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார் எதற்கு என்னிடம் வந்தாய் கலெக்டர் இடமே போ என்று கேவலமாக பேசினார் விஏஓ முரளி மனோகர் மீது நேர்முக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக நம் மனுவில் கூறப்பட்டுள்ளது…