ராகுல்காந்தி–சட்ட நாளையொட்டி ராகுல்காந்தி உறுதி மொழி…
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த மாதிரியான தாக்குதலையும் அனுமதிக்க மாட்டோம் என அரசியலமைப்புச் சட்ட நாளையொட்டி ராகுல்காந்தி உறுதி மொழி அளித்துள்ளார்.’ இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் மட்டுமல்ல. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதி. ஒருவர் எந்த மதம், மொழி, மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சமத்துவம், மரியாதை,நீதிதரப்படவேண்டும்’எனதெரிவித்துள்ளார்.மேலும் அவரின் எக்ஸ் தள பதிவில்; “இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒருவெறும்புத்தகம்மட்டுமல்ல, இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்ட ஒரு புனிதமான வாக்குறுதி. ஒருவர் எந்த மதம் அல்லது சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தப் பிராந்தியத்தில் இருந்து வந்தாலும், எந்த மொழி பேசினாலும், ஏழையாக இருந்தாலும் அல்லது பணக்காரராக இருந்தாலும்,அவருக்குச்சமத்துவம்,மரியாதைமற்றும்நீதிகிடைக்கும்என்றவாக்குறுதி.அரசியலமைப்புச்சட்டம்ஏழைகள்மற்றும்ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக் கவசம், அவர்களின் வலிமை மற்றும் ஒவ்வொரு குடிமகனின் குரல் ஆகும். அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பாக இருக்கும்வரை,ஒவ்வொருஇந்தியரின்உரிமைகளும்பாதுகாப்பாகஇருக்கும்.அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த விதமான தாக்குதலும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம். அதைப் பாதுகாப்பது எனது கடமை, அதன் மீது விழும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் முன்னால் நான் உறுதியாக நிற்பேன். உங்கள் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்ட நாள் நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.