பாஜக – அதிமுக வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்ஆர்ப்பாட்டம்..
காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் பாஜக – அதிமுக வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையிலும் ஒன்றிய,பேரூர் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், “நிதி இல்லை” 100 நாள் வேலை இல்லை” என மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக
அரசைக்கண்டித்தும், இதற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் காஞ்சிபுரம்சட்டமன்றஉறுப்பினர்சி.வி.எம்.பி.எழிலரசன்,மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பாஜக – அதிமுக வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையிலும் ஒன்றிய ,பேரூர் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், “நிதி இல்லை” 100 நாள் வேலை இல்லை” என மத்திய பட்ஜெட்டில்தமிழகத்தைவஞ்சிக்கும்ஒன்றியபாஜகஅரசைக்கண்டித்தும், இதற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் பாண்டியன், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர்தேவேந்திரன், வாலாஜாபாத் ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.