பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்.முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.,,,
தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ் அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளது பரபரப்பைகிளப்பியுள்ளது. மக்களவை தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ். அதிமுகவுடன் பாஜக கைகோர்த்த பிறகு ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்த்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ஓபிஎஸ் விவகாரத்தில் ரெட் சிக்னலே கொடுத்தார். எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் நுழையில் ஓபிஎஸ்-ன் முயற்சி எடுபடவில்லை.ஓபிஎஸ் உடன் இருந்த ஆதரவாளர்களும் அவரை தனித்து விட்டு திமுக, அதிமுக பக்கம் சென்றனர். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தது ஓபிஎஸ்-க்கு பேரிடியாக இருந்தது. அவர் வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்து வருகிறது. திமுக, தவெக தரப்பில் இருந்து ஓபிஎஸ் யிடம்பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக பேச்சு அடிபட்டது. அதேபோல் ஓபிஎஸ்-ஐ மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வரும் அசைன்மெண்ட்டை டிடிவி தினகரனிடம் பாஜக தலைமை ஒப்படைத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார் ஓபிஎஸ். சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். சட்டப்பேரவையில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு வரும் போது பேசுவதற்காக ஓபிஎஸ் காத்திருந்தார். பின்னர் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும் கூட்டணி கணக்குகளும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கடந்த சில நாட்களாகவே சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். எதிர்க்கட்சியினர் இன்றையை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், இத்தனை நாட்களாக வராத ஓபிஎஸ் இன்று present ஆகியுள்ளார். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக திடீரென திமுக கூட்டணியில் இணைந்து ட்விஸ்ட் கொடுத்தது. இந்தநிலையில் ஓபிஎஸ்-ம் ஸ்டாலினை சந்தித்துள்ளது கூட்டணி பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.அடுத்த சில நாட்களில் கூட்டணி பற்றிய முக்கியமான முடிவை ஓபிஎஸ் எடுக்கவுள்ளதாக சொல்கின்றனர்.