fbpx
Others

நிதின் கட்கரி– விரைவில் தமிழ்நாட்டிற்க்கு புதிய பாலங்கள்..?

திருப்பூர், சிவகங்கை, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாலங்கள், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளித்து சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜனவரி 4) வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 9.22 கோடியில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி – தாராபுரம் – கரூர் சாலையில் ஒரு பாலமும், ஈரோடு – முத்தூர் -வெள்ளக்கோவில் புதுப்பை ரோடு பகுதியில் ஒரு பாலமும் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை – புதுகோட்டை மாவட்ட எல்லை சாலையில் ரூ 8.26 கோடி செலவில் உயர் மட்ட பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் கொடுக்கூர் – காடுவெட்டி சாலையில் ரூ.5.89 கோடி செலவில் பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்காக ரூ 19.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உப்பூர் – கோட்டையூர் சாலையில் ஒரு பாலமும், திருவாடனை – எஸ்.பி.பட்டினம் சாலையில் ஒரு பாலமும் அமைக்கப்பட உள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் முதுகளத்தூர் – வீரச்சோழன் சாலையில் ரூ 10.64 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிதிஒதுக்கப்பட்டுள்ளது. CRIF 2024-25ன் கீழ் ஒதுக்கப்பட்ட இந்தத் திட்டங்களால் கனமழையின் போது ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க முடியும், தொலைதூரப் பகுதிகளுக்கு எளிதாக சென்று வர முடியும், முக்கியமாக இவை உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும், சுமூகமான போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு  மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close