fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

மதுக்கடைகள் விவகாரத்தில் மறுபரிசீலனை தேவை…! கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தல்

DMDK vijaykanth tweets

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பு என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் மே 7 முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது: கொரோனா காரணமாக சென்னையில் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.

மற்ற மாவட்டங்களில், மே7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் மக்களுக்கும்,நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்று கூறி உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close