Others
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம்—சிறப்பு செய்தி
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில்மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆவடி திருமுல்லைவாயல் தனியார் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர். டி. சுந்தரம் தலைமை தாங்கினார்.காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர். எஸ்.ஆர். லட்சுமணன், கலைமுதுமணி. ஆர். முருககனி ஆசான் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர். எல்.பிரபாகரன்வரவேற்றார்.ஆவடி மாநகராட்சி மேயர். கு. உதயகுமார், போட்டியை தொடங்கி வைத்தார்.மாமன்ற உறுப்பினர். துளசிங்கம் சக்திவேலன் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். மாவட்ட நிர்வாகிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருப்பாளர்.

டி..ராஜேந்திரன் நன்றி கூறினார்.