Others
திருவள்ளூர்– தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபாகூட்டம்..
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபாகூட்டம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி செயலர்.உல்லாசகுமார்தலைமைதாங்கினார்.வட்டாரவளர்ச்சி அலுவலர். வேதநாயகி, பற்றாளர். சத்தியவாணி முன்னிலை வகித்தனர்.வேளான்மைதுறை, சுகாதார துறை அலுவலர் கள், மற்றும் மகளிர் குழுவினர், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மழைநீர் தேங்காமல் இருக்கவும், குப்பைகளை அகற்றவும் விரைவாக நடவடிக்கை எடுத்த ஊராட்சி செயலாளருக்கு பொதுமக்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.