திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை–பக்தர்கள் குவிந்துள்ளனர்….
திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை நடைபெற உள்ளது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்குஅருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறைமட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு ஆனந்த நடனத்துடன் எழுந்தருள 2 ஆயிரத்து 668 அடிஉயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். நாளை முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலைஉச்சியில் சிவபெருமான் தீப்பிழம்பாய் காட்சி தருவார். திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார்15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலைஅண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயரம்உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய்பயன்படுத்தப்படும். மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும்,
மகாதீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துவருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள்வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின்பாதுகாப்பிற்காக15ஆயிரம்போலீசார்திருவண்ணாமலையில்முகாமிட்டுள்ளனர்.கிரிவலப்பாதையில்போலீசார்சார்பில்கண்காணிப்புகோபுரங்கள்அமைக்கப்பட்டுபோலீசார்தீவிரகண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர்.திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டுஅறைஅமைத்துகண்காணிப்புபணிகள்நடைபெற்றுவருகிறது.அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும்கிரிவலப்பாதையில்சிறப்புமருத்துவமுகாம்கள்அமைக்கப்பட்டுள்ளன. அவசரகாலஉதவிக்கு108ஆம்புலன்ஸ்மற்றும்தீயணைப்புமீட்புவாகனங்கள்தயார்நிலையில்நிறுத்தப்பட்டுள்ளன.மின்சாரவாரியம்சார்பில்தடையில்லாமின்சாரம்வழங்கதேவையானநடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.மாநகராட்சிநிர்வாகம்சார்பில்திருவண்ணாமலைநகரம்மற்றும்கிரிவலபாதையைதூய்மையாகபராமரிக்கஆயிரத்து200தூய்மைகாவலர்கள்பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தீபத்திருவிழாவைமுன்னிட்டுகிரிவலப்பாதைஅரசுகலைக்கல்லூரிஅருகில்மாட்டுசந்தைஅமைக்கப்பட்டுள்ளது. மாட்டு சந்தையில் மாடுகள், குதிரைகள், ஒட்டகம் ஆகியவை விற்பனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.தீப தரிசனம் காண திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 பிரதான சாலைகள் வழியாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.