தவெக ஆண்டுவிழா—சிறப்பு செய்தி..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் ஆணையத்திலும் முறைப்படி பதிவு செய்தார். தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி, கட்சிக்கான பாடல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார்.அப்போது தனது அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் பகிரங்கமாக அறிவித்தார். தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தவெககட்சியின்இரண்டாம்ஆண்டுதொடக்கவிழாஇன்றுகடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்அலுவலகத்தில் விஜய் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.இதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைகளையும் அலுவலகத்தில் திறந்து வைத்துள்ளார் விஜய். பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த விஜய் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மாணவிகளுக்கு மடிக்கணி மற்றும் மகளிருக்கு தையல் மிஷின்களும் வழங்கப்பட்டு உள்ளனமேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட
உதவிகளை வழங்க வேண்டும் என விஜய் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று தவெக மாவட்ட நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதனைத் மாவட்ட செயலாளர்கள் குறித்த ஐந்தாம்கட்டப்பட்டியலைதமிழகவெற்றிக்கழகம்கட்சியின்தலைவர் விஜய்அறிவிக்கஉள்ளார்.ஏற்கனவே4கட்டங்களாகமாவட்டசெயலாளர்கள்அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நிர்வாகிகளை அறிவிக்கும் விஜய், அவர்களுடன் உரையாற்ற உள்ளார். இதனிடையே விரைவில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் விஜய் சந்திப்பார் என்றும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.