fbpx
Others

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிப்பு..

அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.அரசுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் தார்மீக கடமையாகும்.உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் மீண்டும் ஒளிபரப்பு தொடர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

Related Articles

Back to top button
Close
Close