தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பில் சிலம்ப போட்டி…
தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று குருவட்டத்தில்நடந்த சிலம்ப போட்டியை முத்துராமன்ஜி தலைமையில் இயங்கும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர். எஸ். ஆர். லட்சுமணன், எல். கார்த்திக், எல். பிரபாகரன், எம்.ஜி.பழனிசாமி, பி. ஜி. சண்முகம், மற்றும் நடுவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் இணைந்து நடத்தினர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தெரேசாபுரம் குறுமலர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில்குடியரசு தின விழா மற்றும் பாரதியார் பிறந்த தின விழா விளையாட்டு போட்டியில்சிலம்பம், கடற்கரை கைப்பந்து, வளைய பந்து உள்ளிட்ட விளையாட்டு களில் 33 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 368 மாணவ மாணவியர்கள். கலந்துகொண்டனர்.உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் தலைமையில், குறுமலர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்ஆனந்தம்போட்டியைதுவக்கி வைத்தார்,உடற்கல்வி ஆசிரியர்கள் : சோமசுந்தரம் கோமளா, சரிதா ,அனிதா, பாண்டியன், எட்வின் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.