Others
செங்குன்றம் — அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் – சிறப்பு செய்தி.


செங்குன்றம் ரேவதி ஸ்டோர் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் வள்ளி தெய்வ சேனா சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் சன்னதியில் பட்டப்பா ஐயர் தலைமையில் மக்கள் நலம் பெற சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.ஆலயதலைமைஅர்ச்சகர்வெங்கடாசலம் தலைமையில் முருகப்பெருமானுக்கு 11 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், தூப, தீப ஆராதனை நடத்தப்பட்டது.ஆலய தலைவர். பட்டுராஜன-பிரிய தர்ஷினி குடும்பத்தினர் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது..500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.துணைத் தலைவர். பழனி செல்வம், துணை செயலாளர். பிரபாகரன்,
சட்ட ஆலோசகர் பிரகாஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.