கவின் ஆணவப் படுகொலை சிபிசிஐடிக்கு மாற்றம்–கனிமொழி எம்.பி. பேட்டி…
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் வீட்டுக்கு நேரில் சென்ற
அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பி கனிமொழி அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். தூத்துக்குடி மாவட்டம், பிரையன்ட் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). மென்பொறியாளரான இவர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கவின் செல்வகணேஷ் தனது பள்ளி தோழியான சித்தா டாக்டர் சுபாஷினி என்பவரை காதலித்து வந்துள்ளார். பள்ளி பருவம் முதல் காதல் என்பதாலும், இருவேறு சமுகத்தினர் என்பதால், சுபாஷினியின் பெற்றோரான எஸ்ஐ தம்பதி சரவணனும், கிருஷ்ணகுமாரியும்(மணிமுத்தாறுதமிழ்நாடுசிறப்புகாவல்படைபிரிவில்பணியாற்றிவந்தனர்)இதற்குஒப்புக்கொள்ளவில்லை.இருந்தாலும்அவர்களின்
ஒப்புதலுக்காகபலஆண்டுகளாககாத்திருந்தனர்.இதற்கிடையே, கவின் செல்வகணேஷ் தனது தாத்தாவை சித்தா டாக்டரான காதலிசுபாஷினியிடம்கடந்த27ம்தேதிதிருநெல்வேலிக்குஅழைத்துவந்துள்ளார்.அப்போதுசுபாஷினியின்தம்பிசுர்ஜித்(21),கவின்செல்வகணேஷிடம்பேசவேண்டும்என்றுதனியாகஅழைத்துவந்து,ஆணவக்கொலை செய்யும் நோக்கில் கொடூரமாக கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும்பதற்றத்தையும்ஏற்படுத்தியது.இதுதொடர்பாகபாளையங்கோட்டைபோலீசார்வழக்குப்பதிந்துகவின்செல்வகணேஷைபடுகொலைசெய்தசுர்ஜித்தைகைதுசெய்தனர்.மேலும்ஆணவக்கொலைக்குகாரணமானசுபாஷினியின்பெற்றோரும்,உதவிஆய்வாளர்களுமானசரவணனையும்,கிருஷ்ணகுமாரியையும்சஸ்பெண்ட்செய்துதமிழ்நாடுசிறப்புகாவல்படைடிஐஜிவிஜயலட்சுமிஉத்தரவிட்டார்.இந்தஆணவக்கொலை சம்பவத்தால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இரு சமுகத்தினரிடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை வழக்கை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில், கவினின் வீட்டுக்கு நேரில் சென்ற திமுக பொருளாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர் கே.என். நேரு சென்றிருந்தார். குற்றம் செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கவினின் பெற்றோரிடம் கனிமொழி தெரிவித்தார். மேலும், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாயாரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கவினின் பெற்றோர் கனிமொழியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி எம்.பி.; பெற்றோர்கள் தங்களது இளம் மகனை பறி கொடுத்துள்ள நிலையில்
அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். முதல்வர் சார்பில் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்திக்க வந்திருக்கிறோம். நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் சூழலை அரசு உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையை தர வந்துள்ளோம். மேலும் சுர்ஜித்தின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில்விசாரணைக்குபின்அடுத்தகட்டநடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும்.இந்தவழக்கைமுதல்வர்சிபிசிஐடிக்குமாற்றிஉள்ளார்.நிச்சயமாகயாரையும்பாதுகாக்கும்சூழல்இல்லை.வழக்கில்சம்பந்தப்பட்டயாராகஇருந்தாலும்நடவடிக்கைக்குஉட்படுத்தப்படுவார்கள். ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என்று நம்புகிறேன்” என்றும் கூறினார்.