RETamil News
அமெரிக்காவில் ஒரே நாளில் 1200 பேர் கொரோனா தொற்றால் பலி
உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெருமளவில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.30 லட்சத்தையும் தாண்டியுள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரம் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது. அங்கு மட்டும் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயுரத்தையும் தாண்டியுள்ளது. நோய் தொற்று உறுதி செய்தவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தையுள் தாண்டி வருகின்றது.
மேலும் அங்கு பல்வேறு பகுதிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் நகரமே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளது. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.