ChennaiRETamil Newsதமிழ்நாடு
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி…! 54 ஆனது உயிர்பலி
One more Corona causality in chennai
சென்னை: கொரோனாவுக்கு வங்கதேசத்தை சேர்ந்த நபர் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப 3 வண்ணங்களில் மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை கொரோனாவுக்கு தமிழகத்தில் 8 ஆயிரத்து 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 53 பேர் பலியாகி இருந்தனர். இந் நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. ஆகையால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.