உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்… விடுதலை எப்பொது..?

சர்வதேசபத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), 2025 ஆம் ஆண்டு உலகளவில் பத்திரிகையாளர்கள் கொலைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 இல் உலகம்முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளனர். 2024 இல் 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொல்லப்பட்ட பத்ரிக்கையாளர்களில் 118பேர்ஆண்கள்மற்றும்10பேர்பெண்கள்ஆவர்.கொல்லப்பட்டவர்களில் 74 பேர மேற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் குறிப்பாக 56 பத்திரிகையாளர்கள் காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ்போரின்போதுகொல்லப்பட்டுள்ளனர்தொடர்ந்து ஆப்பிரிக்காவில் 18 பேர், சீனா உள்ளிட்ட ஆசியா-பசிபிக் நாடுகளில் 15 பேர், அமெரிக்காவில் 11பேர்,ஐரோப்பியநாடுகளில்10பேர்பணியின்போதுகொல்லப்பட்டனர்.இந்தியாவில்கடந்த ஆண்டில்4பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் பாஜக ஆளும் சத்தீஸ்கர்மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலைத் திட்ட ஊழல் குறித்து செய்தி சேகரித்தபத்திரிகையாளர்முகேஷ்சந்திராகர்கொல்லப்பட்டதைஅறிக்கைகுறிப்பிட்டுள்ளது. இதுதவிர்த்து உலகளவில் பணியின்போது விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொலைகளுக்கு மேலாக, உலகம் முழுவதும் 533பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில் ஆசியா-பசிபிக் பிராந்தியம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக சீனாவில் 143 பேரும்,மியான்மரில் 49 பேரும் சிறையில் உள்ளனர்.