இனி புதிய அடையளத்துடன் கோவை…..

கோவையில் உள்ள உக்கடம் பேருந்து நிலையம் கோவை மாநகரின் மிக முக்கியமான போக்குவரத்து முனையம்மாக இருக்கிறது. இங்கிருந்துதான் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி போன்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது கோவையின் ‘தெற்கு வாசல்’ என்று அழைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தின் பாலக்காடு மற்றும் திருச்சூர் பகுதிகளுக்குச் செல்லும் கேரள அரசுப் பேருந்துகளும்தமிழகப்பேருந்துகளும்இங்கிருந்துஅதிகளவில்இயக்கப்படுகின்றன.உக்கடத்தை பொறுத்தவரை பேருந்துகள் வந்து செல்லும் இடமாக மட்டுமின்றி, மாநகரின் முக்கியமான வணிக பகுதியாக இருக்கிறது. மிகப்பெரிய மீன் மார்க்கெட், காய்கறி சந்தை, ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள் என எல்லாமே உக்கடம் முதல் டவுன்ஹால் வரை பரவி கிடக்கின்றன. கோவையின் வணிக மையமாக உக்கடம் இருக்கிறது. இதனால் எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும்இதனால்தான் உக்கடத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அது ஓரளவு நெரிசலை கட்டுப்படுத்துகிறது. இந்நிலையில் ரூ.21.55 கோடி மதிப்பீட்டில் உக்கடத்தில் இரட்டை பஸ் முனைய திட்டத்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதிக போக்குவரத்து காரணமாக உக்கடத்தில் சாலையை கடப்பது சிரமமாக இருக்கிறது.. 2 பஸ்நிலையங்களும்செயல்பாட்டுக்குவரும்போது
சாலையைகடப்பதில்மேலும்சிரமம்ஏற்படும்எனதெரிகிறது.ஏனெனில்உக்கடத்தில்புதியபேருந்துநிலையம்செயல்படும்போது மேலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இதனால் வயதான பயணிகள் மற்றும் குழந்தைகள் கடக்க மிகவும் சிரமப்படுவார்கள். எனவே அந்த பகுதியில்நடைமேம்பாலம்அமைக்கவேண்டும்என்றுகோரிக்கை எழுந்தது.உக்கடம்பகுதியில்தொடர்ந்து வாகனங்கள் செல்கின்றனமேலும் சாலையோரங்களில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். எனவே உக்கடம் 2 பஸ் நிலையங்களையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையோ அல்லது நடைமேம்பாலமோ உடனடியாக அமைக்க வேண்டியது அவசியம் என்கிற நிலை உருவானது.இதையடுத்து உக்கடத்தில் 2 பஸ் நிலையங்களையும் இணைக்கும் வகையில் உக்கடம் சந்திப்பில் ஒரு நடைமேம்பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை கோவை மாநகராட்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.6 கோடியே 31 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு ஒப்புதல் மற்றும் நிதியுதவிக்காக திட்டவரைவு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் தொடங்கும் என கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.