இந்திய வீரக்கலை பயிற்சி கூட பள்ளி மாணவ மாணவிகளுக்கான சிலம்பம், கராத்தே போட்டி…….
சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய வீரக்கலை பயிற்சி கூட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பம், கராத்தே போட்டி சென்னைக்கு அருகில் கொரட்டூர் இன்ஃபினிட்டி டர்ஃப் அரங்கில் நடந்தது.இந்திய வீரக்கலை பயிற்சி கூடம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.டாக்டர். வீரகலை வில்சன் ஆசான் தலைமையில் நடந்த இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக கலைமுது மணி. ஆர். முருகக்கனி ஆசான் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழையும் வழங்கி பாராட்டினார்நடுவர் பணியில் ஈடுபட்ட நடுவர்களுக்கும் கேடயம் வழங்கினார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த முருககனி ஆசானுக்கு வீரக்கலை வில்சன் நினைவு பரிசும் வழங்கி பொன்னாடை போர்த்தினார்.மாணவர்களின் பெருமளவில்பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



