fbpx
Others

இங்கிலாந்தில் மருத்துவர்கள் ஏமாற்றமடைந்து வெளியேறுவது அபாயம்…?

இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 05 மருத்துவர்களில் ஒருவர் வேலையை விட்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே நேரத்தில், 08 பேரில் ஒருவர் காட்டுகின்றன. அதே நேரத்தில், 08 பேரில்ஒருவர்நாட்டைவிட்டு,வெளிநாட்டில் வேலைசெய்யயோசித்துவருகிறார்.இந்தஆராய்ச்சியை மேற்கொண்ட பொது மருத்துவ கவுன்சில் (GMC), மருத்துவமனை காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும் திட்டங்கள் அவர்களைத் தக்க வைத்துக்கொள்ள இன்னும் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபத்தில் இருக்கும் என்று எச்சரித்துள்ளது.ஜூலை 2029 க்குள், இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை போன்ற வழக்கமான மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் 92% நோயாளிகள் 18 வாரங்களுக்குள் கண்டறியப்படுவார்கள் என்று பிரதமர் கூறியுள்ளார்.இதேவேளை, வெளிநாடு செல்வதற்கு மருத்துவர்கள் கூறிய முக்கிய காரணம், அவர்கள் ஏனைய நாடுகளில் “சிறப்பாக நடத்தப்படுகிறார்கள்”, இரண்டாவது பொதுவான காரணம் சிறந்த ஊதியம்.43 சதவீதம் பேர் ஏனைய நாடுகளில் தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்ததாகக் கூறினர். அதே நேரத்தில், 15 சதவீதம் பேர்வெளிநாடுசெல்வதற்கு“கடினமான நடவடிக்கைகளை” எடுப்பதாகக் கூறினர். அதாவது பதவிகளுக்கு விண்ணப்பிப்பது அல்லது ஆட்சேர்ப்பு செய்பவர்களைத் தொடர்புகொள்வது போன்றவை.“எந்தவொரு தொழிலையும் போலவே, தங்கள் தொழில் வாழ்க்கையில் ஏமாற்றமடைந்த மருத்துவர்கள் வேறு எங்கும் பார்க்கத்தொடங்குவார்கள்”என்றுGMCஇன்தலைமைநிர்வாகிசார்லிமாஸிகூறினார்.“மருத்துவர்கள்திருப்திஅடையவேண்டும்,ஆதரிக்கப்படவேண்டும்,மேலும்தங்களுக்குஒருநம்பிக்கையான எதிர்காலத்தைக் காண வேண்டும், இல்லையெனில் அவர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தை நாம் முற்றிலுமாக இழக்க நேரிடும்” என்று அவர் குறிப்பிட்டார்.

tq this news

Related Articles

Back to top button
Close
Close