அத்திப்பட்டு ஊராட்சியில் ஆடவர் மற்றும் பெண்கள் குத்து சண்டை போட்டி.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள கலைஞர் அரங்கில் மாநில அளவிலான ஆடவர் மற்றும் பெண்கள் அழைப்பு குத்து சண்டை போட்டியை
சென்னை மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும்
மாசி முதலாவது குத்துச்சண்டை கோப்பை 2024 க்கான போட்டி நடைபெறுகிறது இதில் 400க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஜூனியர்,சப் ஜூனியர் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.இப்போட்டியை
அர்ஜுனா விருது பெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை விளையாட்டு வீரர் தேவராஜன் தொடங்கிவைத்தார். இதில் மாசி அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் குத்துச்சண்டை வீரர். சங்கர் மற்றும் ஜெய் கணேஷ்மணி டேவிட் ரமேஷ் உள்ளிட்ட முன்னாள் பிரபல குத்துச்சண்டை வீரர்கள் பலர் கலந்து கொண்டுபல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியை தொடங்கி வைத்து போதை பழக்கங்களை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் குத்துச்சண்டை போட்டிகளில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க அக்கறை காட்ட வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினர்..