Others
மணிப்பூர் — பெண்களுக்கு எதிரான 27 எப்ஐஆர் மீது சிபிஐ விசாரணை…
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி மெய்டீஸ் சமூகத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதில் அவர்களுக்கும் நாகா குக்கி சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இவற்றில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 19, 3 ஆயுதக்கிடங்கு கொள்ளை, வன்முறை மற்றும் கொலை தொடர்பான 2, கடத்தல் மற்றும் பொதுவான குற்ற சதி உள்பட 27 வழக்குகள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த 53 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழு வன்முறையினால் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு சென்று அங்கு சந்தேகத்துக்குரியவர்களிடம் விசாரித்து வருகின்றனர்..