fbpx
Others

பரமக்குடியில் மாநில அளவிலான சிலம்பாட்டபோட்டியில்கலந்து கொண்ட500 மாணவ மாணவிகள்

தமிழ்நாடு சிலம்பக் கழகத்தில் இணைந்து செயல்படும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதியார் விளையாட்டு சங்கமம் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியும் இணைந்து மாநில அளவிலான சிலம்பப் போட்டியை பள்ளி திடலில் நடத்தியது.பள்ளி குழும தலைவர் .
என். முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார்.பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது . கருணாநிதி தமிழ்நாடு சிலம்ப கழக பொதுச் செயலாளர் அகத்தியா.அ. ஞானம் கலை முதுமணி
ஆர். முருகக்கனி நகர்மன்ற உறுப்பினர்கள் ஜீவரத்தினம் . அப்துல் மாலிக் முன்னிலை வகித்தனர்.பள்ளி முதல்வர். ஜேம்ஸ் ஜெயராஜ்.. நிர்வாக அலுவலர். ஜெய்சுதா வரவேற்றனர் .பரமக்குடி. எம்.எல்.ஏ. செ. முருகேசன் சிலம்ப போட்டியை தொடங்கி வைத்தார்..
மாவட்ட செயலாளர் சண்முகவேல் ஏற்ப்பாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுமார் 500 மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வளர்மதி. உடற்கல்வி ஆசிரியர்கள் கமலக்கண்ணன். மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் நடுவர்கள் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தந்தனர்..

Related Articles

Back to top button
Close
Close