fbpx
Others

புட்டபர்த்தியில் நிகழ்ந்த அதிசயம்….சிறப்பு செய்தி

ஆந்திர மாநிலம்:‌ ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம் புட்டபர்த்திநகரில் உள்ளபிராமணப்பள்ளி சாலையில் உள்ள ஆர்.சங். வில்லாஸ் குடியிருப்பு வளாகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்‌ ஒருவர்சாய்பாபாவின்சிலைகளைக்  கொண்ட கோயில் கட்டியுள்ளார், சிலைகளுக்கு தினமும் தவறாமல் பூஜை செய்து வருகிறார். எதிர்பாராத விதமாக அவரது வீட்டின் சன்னதிக்குள் கடந்த திங்கள் கிழமை அன்று 8 அடி நிளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. சத்ய சாய் பாபா சிலையின் கழுத்தில் சுற்றிக் கொண்டு சிலையை முத்தமிடுதல் போன்ற செயல்களை செய்தது. நாகப்பாம்பை பால், தண்ணீர் , மஞ்சள், குங்குமம், பூக்கள் தூவி பக்தர்கள் வழிபட்டனர். நாகப்பாம்பு சில மணி நேரம் சிலையைச் சுற்றி சுற்றி வந்து வணங்கிக்கொண்டிருந்தது. இந்த காட்சியை காண ஏராளமான பக்தர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close