fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

நீதிபதியை அவமரியாதையாக பேசிய காவல்துறை அதிகாரிகள்…! அதிரடியாக பணியிட மாற்றம்!

ADSP, DSP transferred in sathankulam

சென்னை:

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை விசாரணையின் போது மரணம் அடைந்தனர்.

அதன் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். இந் நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையை தென்மண்டல ஐஜி எடுத்து உள்ளார்.

மேலும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close