fbpx
Others

11 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.

 ஆவடி மாநகராட்சி ஆணையர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆவடி மாநகராட்சி கமிஷனராக உள்ள கே.தர்ப்பகராஜ், உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக உள்ள (மத்தியம்) எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், ஆவடி மாநகராட்சி ஆணையராகவும்; மதுரை மாநகராட்சி ஆணையராக உள்ள கே.ஜி.பிரவீன்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராவும்(மத்தியம்); கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) மற்றும் கடலூர் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி திட்ட அதிகாரியாக உள்ள எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக உள்ள வி.சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும்; பெருநகர சென்ைன மாநகராட்சி மண்டல துணை ஆணையராக உள்ள(வடக்கு) எம்.சிவகுரு பிரபாகரன், கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையராகவும்; தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) மற்றும் தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி திட்ட அதிகாரியாக உள்ள தாகரே சுபம் தியாந்தியோராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப்-கலெக்டராக உள்ள கட்டா ரவி தேஜா, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராகவும்(வடக்கு); கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையராக உள்ள எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராகவும் (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டங்கள்); பொள்ளாட்சி சப்-கலெக்டராக உள்ள எஸ்.பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும்(வளர்ச்சி); ஓசூர் சப்-கலெக்டராக உள்ள ஆர்.சரண்யா, கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) மற்றும் கடலூர் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி திட்ட அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close