கொரோனா தாக்கம் எதிரொலி…! ஆஸ்கர் விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு!
Oscar award function postponed
நியூயார்க்:
ஆஸ்கார் விருது வழங்கும் விழா 40 ஆண்டுகளில் முதல் முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கதி கலங்கி உள்ளன. ஹாலிவுட் முதல் அனைத்து மொழி பட உலகமும் முடங்கி இருக்கிறது. அதன் காரணமாக, படங்கள் இணைய தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது. தற்போது கொரோனாவால் விருது வழங்கும் விழாவை 4 மாதங்கள் தள்ளி வைத்து ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு செய்து இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தன
93 வது ஆஸ்கார் விருதுகள் இனி திட்டமிட்டபடி பிப்ரவரி 28 அன்று நடைபெறாது என்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக, 2021 ஏப்ரல் 25 தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.