தேனி– வட்டாரபோக்குவரத்து ஆணையஅலுவலகத்தில் நடப்பது என்ன..?
RTOசம்பத்தப்பட்டவேலைகள் எல்லாம் ஆன்லைனில் என்று சொல்லும் தமிழக அரசின் விளம்பரம், பலகையோடு மட்டுமே நிற்கிறது. எதுவும் நடைமுறையில் இல்லை. மாநில அரசிற்கு அசிங்கம் ஏற்படவேண்டும் என்ற அடிப்படையிலேயே தேனி மாவட்டம் தேனி போக்குவரத்து ஆணையர் செயல்படுவதாக தெரிகிறது. அரசு ஏஜன்சிகள் இல்லாமல் சாதாரண ஏழை எளிய மக்கள் லஞ்ச லாவாண்யம் இல்லாமல் பயனடையவேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் மூலம் செயல் படுத்த வேண்டும் என்று நினைத்தால் அரசு அதிகாரிகள் இவற்றை செயல் படுத்தாமல் அரசு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்டு தன் இஷ்டப்படி செயல் படுகின்றனர்….. அறிவிப்பு தகவல் பலகைகள் எதற்காக ? மக்களை ஏமாற்றும் வேலை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….இதை மாவட்ட ஆட்சியர் மற்றும் உரிய மேலதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் !!!…………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.