Others
அரசின் கவனத்திற்கு…..மேலதிகாரி அலட்சியம்….?
மின் ஊழியரின் அவல நிலை
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் மின்னல் என்ற ஊரில் கணபதிபுரம் M. ராஜு என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.12.22) அன்று அவசர வேலை என்று தன் மேலதிகாரி அழைப்பிற்கினங்க வேலைக்கு சென்றார். வேலை செய்கின்ற இடத்தில் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து பரிதாப நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார். இதுவரை உடன் பணிபுரிபவரோ மேலதிகாரியோ யாரும் வந்து மருத்துவமனையில் பார்க்கவில்லை இதனால் அந்த குடும்பம் பயங்கரமான சோக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சமூக அக்கறை நிலை கொண்டவர்கள் எப்படியாவது முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.