தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1075ஆக உயர்வு; ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றது. தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 106 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1,075-ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து , பலி எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;
தமிழகத்தில் இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 39 ஆயுரதி 41. மேலும் 58 ஆயிரத்தி 189 பேர் வீட்டு கண்காணிப்பை முடித்து விட்டனர். தமிழகத்தில் விமான நிலையம் அருகே உள்ள முகாம்களில் அரசு கண்காணிப்பில் 62 பேர் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் தொண்டை சளி மாற்று ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 1075 பேர் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் 12-ஆம் தேதி ஒரே நாளில் 106 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 16 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றுவந்தவர்கள் என்றும் , மீதம் உள்ள 90 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்ததையடுத்து , பலி எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. தமிழக மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோன வைரஸ் பாதிப்பை தெரிந்துகொள்ள 14 அரசு பரிசோதனை மையங்களும், 9 தனியார் பரிசோதனை மையங்களும் மொத்தம் தமிழகத்தில் மட்டும் 23 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.
24 ஆயிரம் பரிசோதனை உபகரணங்கள் ;
தமிழகத்தில் கொரோன பாதிப்பின் சென்னை முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2 தமிழக அரசு டாக்டர்கள், 2 ரெயில்வே டாக்டர்கள் மற்றும் 4 தனியார் டாக்டர்கள் என மொத்தம் 8 மருத்துவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
துரித பரிசோதனை என்பது வேகமாக பரிசோதனை செய்யும் ஒரு கருவிதான். ஆனால் இதன் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய முடியாது. துரித பரிசோதனை மூலம் கொரோனாவைரஸ் பாதிப்பால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியுள் அதற்கான எதிர்ப்பு உள்ளதா என்பதை 30 நிமிடத்தில் கண்டறிய முடியும் .
பி.சி.ஆர் என்ற பரிசோதனை மூலம் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும். தற்போது தமிழகத்தில் 24 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்கள் உள்ளன.மேலும் வரும் வாரத்தில் 90 ஆயிரம்
பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்கள் வந்து சேர உள்ளது. இந்த பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்கள் மூலம் அனைவரையும் தற்போது வேகமாக பரிசோதனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.