Others
தேனி மாவட்ட ஆட்சியர்அலுவலக செய்தி 28 / 11 / 22
தேனி மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் எய்ட்ஸ் பால்வினைத் தொற்று ஏ.ஆர். டி சிகிச்சை, இரத்ததானம் மற்றும் காசநோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் கிராமிய கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு க.வி முரளிதரன் இந்திய ஆட்சிப் பணி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் மரு. ராஜ பிரகாஷ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.அனுமந்தன்,மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு திட்ட மேலாளர் முகமது பார்க் உட்பட பலர் உள்ளனர்.