இரண்டு சக்கர வாகனங்களை கண்மூடித்தனமாக,ஓட்டிச் செல்லும்அவலநிலை..?
தேனி மாவட்டம் தேனியில் மதுரை சாலை, பெரியகுளம் சாலை, சிவராம் நகர் வள்ளி நகர் சாலை, மற்றும் முக்கிய தெருக்களில் இளம் வாலிபர்களால், பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர் சாலையில் நடந்து செல்வதற்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்லும் அவலம்…?…. இதுபோன்ற இரண்டு சக்கர வாகனங்களை கண்மூடித்தனமாக, அளவுக்கதிகமான வேகத்தில் முக்கிய தெருக்களிலும் மற்றும் சாலைகளில் ஓட்டிச் செல்லும் அவலநிலை!!!. கவனமாக ஒதுங்கி சென்றாலும்,வேகத்தில் ஓட்டிச் செல்லும் இரு சக்கர வாகனத்தின் மூலம் எமன் இவர்களைப் பார்த்து தேடிவரும் அவலநிலை !!! இதில் இந்த மாதிரியான வாகன ஓட்டும் இளம் வாலிபர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமலே தான் சாலையில் அசுர வேகத்தில் ஓட்டிச் செல்லும் அவலநிலை ? இவற்றால் அதிகளவில் இரு சக்கர வாகன விபத்துக்கள் ஏற்படும் முன்பாக மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களை இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்..?…………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி…