இன்று (05.05.2022) இராணிப்பேட்டை செய்தி
இன்று (05.05.2022) இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை,அரக்கோணம் ஆகிய இரண்டு உட்கோட்டங்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள்-18, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்-2, போக்குவரத்து காவல் நிலையங்கள்-2, மதுவிலக்கு அமலாக்க பிரிவுகள்-2, ஆக மொத்தம் 24 காவல் நிலையங்கள் உள்ளன.ஆயுதப்படையுடன் சேர்த்து மொத்தம் 640 காவல் ஆளிநர்கள் (தலைமை காவலர்கள்,முதல் நிலை காவலர்கள்,இரண்டாம் நிலை காவலர்கள்)இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்..
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நேரடி சார்பு ஆய்வாளர் 444 பேர் தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு வரும் 25.06.2022 மற்றும் 26.06.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது, இது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்விற்கு தயாராகும் காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தை சார்ந்த விருப்பம் உள்ளவர்களுக்கு எளிதாக இந்த தேர்வினை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படையில் இன்று (05/05/2022) முதல் இலவசமாக நடத்தப்படுகிறது…
இப்பயிற்சி வகுப்புகளை இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபா சத்யன் இ.கா.ப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்கள்,இந்நிகழ்ச்சியில் திரு. முத்துகருப்பன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இணையவழி குற்றம் , திரு.பிரபு துணை காவல் கண்காணிப்பாளர் இராணிப்பேட்டை உட்கோட்டம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ,உதவி ஆய்வாளர்கள் ,காவல் ஆளினர்கள் ஆகியோர் .. கலந்து கொண்டனர்