ராணிப்பேட்டை–வாலிபர் மீது கொலை வெறிதாக்குதல்,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா,ஆயலம்காலனி, லேபர் தெருவை சசேர்ந்தவர் மனுவேல் இவரின் மகன் தமிழ்வாணன் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து ஆயிலம் புதூரிலுள்ள K P.புளு மெட்டல் கம்பெனி லாரியில் கிளீனரராக வேலை செய்து வருகிறார் ,இந்த நிலையில்கடந்த 03. 5. 2024 அன்று வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துள்ளார்அவரின் வீட்டின் அருகில் மாலையில் எம் .அஜித், குமார், சந்தோஷ், எழில், மதன் ஆகியோ கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர் அவர்களுடன் சேர்ந்து தமிழ்வாணன் மாலை சுமார் 5:30 மணி அளவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது மாலை சுமார் 6:00 மணிக்கு அங்கு வந்த செல்வராசு, இருதயராஜ், கலையமுதன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தமிழ்வாணன்னை பார்த்துஅவதூரான வார்த்தைகளை பேசி,நேற்று உங்க அண்ணனை உங்க போட வேண்டியது தப்பித்துவிட்டான், இன்று உங்கள் வீட்டில் யாரும் இல்லை உன்னை போட்டு தள்ளாமல் விடமாட்டோம் என்று கூறி செல்வராசு என்பவர் கையில் வைத்திருந்த கத்தியால் தமிழ்வாணனின் இடது கை புஜத்தில் வெட்டியுள்ளார்,இருதயராஜ் என்பவர் தன் கையில் வைத்திருந்த பிளேடால் வலது கை புஜத்தில் கிழித்துள்ளார்,கலையமுது என்பவர் தனது கையால் மூக்கின் மீது குத்தியுள்ளார், அதனை தொடர்ந்து தமிழ்ச்செல்வன் என்பவர் அங்கிருந்து ஸ்டெம்ப் கட்டையால் வலது கண் புருவத்தின்மீது அடித்துள்ளார்மேலும் அங்கு வந்த தங்கராஜ்,சாது ஆகியோர் சம்பவம் என்னவென்றே தெரியாமல் ஓடிவந்து கையால் சராமரியாக அடித்துள்ளனர்வலி தாங்க முடியாமல்,ரத்தம் கொட்டிய நிலையில் தமிழ்வாணன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார் இந்த நிலையில் தமிழ்வானனின் அண்ணன் தமிழ்ச்செல்வன் தனது தம்பி ரத்தம் சொட்ட ஓடி வருவதை பார்த்து பதறி ஓடிப்போய் அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்து ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அங்கு தமிழ்வாணன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் தமிழ்வானனிடம் விசாரணை செய்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட செல்வரசு, இருதயராஜ், தமிழ்ச்செல்வன்,கலையமுது, தங்கராஜ், சாது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவத்தால் ஆயிலம் புதூரில் பரபரப்பு ஏற்பட்டது.