Others
காரைக்கால்— தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
காரைக்கால் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி,ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) சார்பில் காரைக்கால் மதகடி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது பயாஸ் தலைமை தாங்கினார். தலைமை பிரதிநிதி ஏர்வாடி ரிஸ்வான், தலைமை பிரதிநிதிகள் அப்துல் ரஹீம் மற்றும் அலாவுதீன், தி.மு.க. மாணவரணி காரை மாநில அமைப்பாளர் பெரியார் ஜவகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அரசியல் குழு செயலாளர் வணங்காமுடி, ம.தி.மு.க மாவட்ட செயலாளர் அம்பலவாணன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக மாவட்ட செயலாளர் முகமது சிக்கந்தர் வரவேற்றார். முடிவில் நகர தலைவர் முகமது நஜிமுதீன் நன்றி கூறினார்.