பாடியநல்லூர்-650 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் போதைப் பொருட்கள்கண்டுபிடிப்பு
ஆவடி மாநகர காவல் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட சோழவரம்காவல்துணைஆய்வாளர். ராம் சுஜின். மற்றும் காவலர்கள். தீபக். கார்த்திக்.ஆகியோர் பாடியநல்லூர் சுங்க சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது வெள்ளை நிற மாருதி சுவிப் கார் நிற்காமல் சென்றது .உடனே அதனை பிடிக்க சென்றபோது சாலையின் பக்க சுவரில் கார் இடிக்கப்பட்டுநின்றது. காரை ஓட்டியவர் அதன் உள்ளிருந்தவர்கள் தப்பி ஓடினர்.போலீசார் காரை சோதனை போட்ட போது 650 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் போதைப் பொருட்கள் காரில் இருந்தது. ஒரு கிலோ எடையுள்ள பயங்கர நெடியுடன் கூடிய குட்கா பவுடர் காரில் இருந்தது.கண்டுபிடிக்கப்பட்டது இந்த கார் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்திருப்பதாகவும் தப்பி ஓடிவர்களை விரைவில் பிடிப்போம் என்றும் அவர்களைப் பிடித்த பிறகு தான் குஜராத்தில் எங்கிருந்து போதை பொருட்கள் கடத்திவரப்பட்டது தமிழ்நாட்டில் யாருக்கு சப்ளை செய்ய இருந்தது போன்ற விபரங்கள் தெரியும் என்று சோழவரம் இன்ஸ்பெக்டர். ராஜ்குமார் தெரிவித்தார் . பிடிபட்ட காரையும் போதை பொருட்களையும் செங்குன்றம் காவல் மாவட்ட துணை கமிஷனர். பாலமுருகன் செங்குன்றம் சரக உதவி கமிஷனர். ராஜா ராபர்ட்.ஆகியோர் நேரில் பார்வையிட்டனர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். சோபிதாஸ்க்கு விரைவில் பதவி உயர்வு…