fbpx
Tamil News

பள்ளி குடிநீர் தொட்டியில் மனித எலும்பு கூடா மாணவர்கள் அதிர்ச்சி !!

டெல்லி அருகே ரோஹிணி மாவட்டம் முக்மேல்பூர் என்ற கிராமத்தில் டில்லி நிர்வாகத்திற்கு உட்பட்ட எம் சி டி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தான் அந்த பள்ளிக்கூடத்தின் குடிநீர் தொட்டியில் துப்புறவு தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியை சாய்த்து கொண்டிருந்தனர். அவ்வாறு சுத்தம் செய்து கொண்டிருந்த போது அந்த குடிநீர் தொட்டியில் மனித எலும்பு மற்றும் எலும்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். எதை உறுதி செய்த தலைமை ஆசிரியர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலை கேட்டதும் அந்த பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தடய அறிவியல் ஆய்வுகூட குழுவும் அங்கு சென்றது. அந்த எலும்பு கூடுகளை பறிமுதல் செய்த அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் எலும்பு கூடுகளை பறிமுதல் செய்த சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close