fbpx
Others

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை — சிறப்பு செய்தி

*💧மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின்,சார்பாக பள்ளி மாணவிக்கு நோட்டு, பேனா வழங்கல்**நிறுவன தலைவர் துவக்கி வைத்தார்*நாகப்பட்டினம் ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் வசித்து வரும் சதக்கத்துல்லா என்பவருது மகள் S.பெளமீனா பத்தாம் வகுப்பில் 453 மதிப்பெண்கள் பெற்று, தற்போது 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.குமரன் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மேற்கண்ட S.பெளமீனா மாணவிக்கு 18 நோட்டுகள், 2 பேனா மற்றும் பென்சில்களை நிறுவன தலைவர் ரா.சம்பத்குமார் அவர்கள் முன்னிலையில்,
திருமதி A.அமுதா ஆனந்தன் அவர்கள் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் பொருள்வை I.கண்ணுவாப்பா அவர்கள் செய்திருந்தார்.படிக்க வசதியில்லா மாணவ – மாணவியருக்கு இந்தாண்டு நோட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சியினை நாகப்பட்டினத்தில் இன்று நிறுவனர் துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக இயங்கி வரும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலமாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவ – மாணவியருக்கு நோட்டுகள் வழங்கப்பட இருக்கிறது.இந்நிகழ்வில், விவசாய சேவை பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.K.V.செல்வராஜ்,தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஓம் முருகா திரு.S.ஆனந்தன் மற்றும் கோர்ட் திரு.P.சரவணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

செய்திகளுக்காக சுரேஷ்

Related Articles

Back to top button
Close
Close