Others
கோவை மாவட்டம்…செய்தி 23/5/2022
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு திங்களூர் மாரியம்மன் மும்மூத்தி திருக்கோவிலில் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதிகள் மாச்சம்பாளையம், குனியமுத்தூர், ஸ்ரீ ராம் நகர், போத்தனூர் சமிதிகள் சார்பாக சிறப்பு சத்ய சாய் பஜன் (இறை நாம சங்கிர்த்தனம்) நடைபெற்றது.நிறைவாக சத்ய சாய் பாபா அவர்களுக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.reporter sairam ajit