மணி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் எஸ்.எல். இருதயம் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.



செங்குன்றம் காவல் நிலையம் எதிரில் புதிதாக, பிரமாண்டமாக கட்டப்பட்ட மணி டெக்ஸ்டைல்ஸ் தி கிராண்ட்ஸ்டோர்திறப்புவிழாகோலாகலமாகநடைபெற்றது.உரிமையாளர் ஐ.ஆரோக்கியதாஸ் அனைவரையும் வரவேற்றார். வள்ளி மயில் பிராப்பர்ட்டீஸ் (பி) லிட் உரிமையாளர் ஏ.முத்தையா தலைமை தாங்கினார்.மணி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் எஸ்.எல். இருதயம் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத் தலைவர். ஆர். விப்ர நாராயணன், செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர். ராஜா ராபர்ட், காவல் ஆய்வாளர். புருஷோத்தமன், புழல் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், பாடியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர். ஜெயலட்சுமி நடராஜன், புள்ளி லயன் ஊராட்சி தலைவர். தமிழ் செல்வி ரமேஷ், கே.ஆர். வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் ரத்னகுமார், நியூ மணி டெக்ஸ்டைல் உரிமையாளர். ஐ.டேவிட்ராஜ், மற்றும் வியாபார பெருமக்கள்,அனைத்துவியாபாரசங்கநிர்வாகிகள்,வாடிக்கையாளர்கள்கலந்துகொண்டனர் திறப்பு விழா அன்று ரூ. 1000த்திற்கு மேல் பொருள்கள் வாங்கிய அனைவருக்கும் நிச்சய பரிசும், காலண்டர், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.