fbpx
RETamil Newsதமிழ்நாடு

அமராவதி அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அமராவதி அணைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் அதன் முழுகொள்ளளவை எட்டி வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நேற்று அமராவதி அணையின் நீர்மட்டம் 83.80 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அமராவதி அணையிலிருந்து உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளதால், அதன் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close