fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்..! 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவு!

Earthquake hits Andaman and Nicobar islands

போர்ட்பிளேர்:

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் இருக்கிறது. ஆகவே இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close